திருநள்ளாறு : சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்று வருகிறது.
திருநள்ளாறு : சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம்
x
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோழர்காலத்தில் இருந்ததுபோன்று, பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம் தேதி தொடங்கின. இன்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்