ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை நடமாட்டம் - சுற்றுலா பயணிகள் அச்சம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை சுற்றி வருவதால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை சுற்றி வருவதால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடகத்தூர் செல்லியம்பட்டி அருகே ஊருக்குள் உலா வந்த இரு காட்டு யானைகள், பொதுமக்கள் உதவியுடன் வனப்பகுதிக்கு விடடப்பட்டன. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. இதனால் அச்சடைந்த சுற்றுலாப்பயணிகள், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story