அழகுடன் ஜொலிக்கும் கிராமத்து ரயில் நிலையம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் ரெயில் நிலையம் வர்ணம் பூசப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது.
அழகுடன் ஜொலிக்கும் கிராமத்து ரயில் நிலையம்
x
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே உள்ள  திருத்துறையூர் ரெயில் நிலையத்தை மாதிரி ரெயில் நிலையமாக மாற்ற தெற்கு ரெயில்வே உத்தரவிட்டது. இதையடுத்து அந்த ரயில் நிலையம் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. அழகுடன் ஜொலிக்கும் கிராமத்து ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. பல வகையான செடிகள், பறவைகள் , வண்ண மீன்கள் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. ரயில் செல்லும் தண்டவாள பாதைகளும் வர்ணங்கள் பூசப்பட்டு பயணிகளை கவரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. திருத்துறையூர் ரயில் நிலையத்தை வரும் 11ந் தேதி தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்