பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு நலத்திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், அங்கிருந்தபடியே, காணொலி காட்சி மூலம் சென்னை சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை இடையிலான விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையையும் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.
இந்த விழாவைத் தொடர்ந்து, திருப்பூரில் நடைபெறும் மேற்கு மண்டல நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக, அருகிலேயே தனியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி வருகைக்காக அந்த பகுதியில் 3 ஹெலிபேட்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story