சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்
x
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து, பெண்ணின் கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட உடல் பாகங்கள் தூத்துக்குடியை சேர்ந்த, துணை நடிகை சந்தியாவினுடையது என்பதை உறுதி செய்த போலீசார், இது தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ண்னை கைது செய்தனர். கடந்த 20-ஆம் தேதி சந்தியாவை கொலை செய்து, உடலை தனித்தனி பாகங்களாக வெட்டி, பல்வேறு பகுதிகளில் வீசியதாக, கைதான கணவர் பாலகிருஷ்ண‌ன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சந்தியாவின், 2 கால்கள், ஒரு கை, இடுப்பு முதல் தொடை பகுதி வரை உள்ள பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற பாகங்களை தேடும் பணி தொடர்கிறது. பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று 2 வது நாளாக, சந்தியாவின் தலை மற்றும் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்காக‌ தூத்துக்குடியில் உள்ள சந்தியாவின் குழந்தைகளை வரவழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்