கோவிலில் கைவிடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆண் குழந்தை ஒன்றை, பெற்றோர் விட்டுச் சென்றுள்ளனர்.
கோவிலில் கைவிடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை...
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆண் குழந்தை ஒன்றை, பெற்றோர் விட்டுச் சென்றுள்ளனர். நேற்று மாலை குழந்தையின் அழுகுரல் கேட்டு, கோவில் பணியாளர்கள் சென்று பார்த்தபோது, கோவில் வளாகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து வந்து பரிசோதித்தபோது, மனவளர்ச்சி குன்றி காணப்படுவது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டுச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு மையத்தில் குழந்தையை ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்