மன்னார்குடி : அரசுப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்

ரூ 1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அளிப்பு
மன்னார்குடி : அரசுப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்
x
மன்னார்குடியில் அரசுப்பள்ளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீர்வரிசையாக பெற்றோர்கள் அளித்தனர். அங்குள்ள காளச்சேரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் அப்பள்ளிக்கு தேவையான, மேஜை, நாற்காலி, ஒலிபெருக்கி உள்பட 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கல்வி சீர்வரிசையாக அளித்தனர். மேலும் இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அளித்தனர். முன்னதாக இந்த பொருட்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்