பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் விபரீதம் : 5 வயது சிறுவன் பலி

மயிலாடுதுறை அருகே பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் விபரீதம் : 5 வயது சிறுவன் பலி
x
மயிலாடுதுறை அருகே உள்ள இளந்தோப்பு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் - வனிதா தம்பதியரின் மகன் விஷ்ணு அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான். பள்ளிக்கு வேனில் சென்ற சிறுவன், வேனை விட்டு இறங்குவதற்கு முன்பாக ஓட்டுநர் வேனை எடுத்துள்ளார். இதில் கீழே விழுந்த விஷ்ணு, பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்