லட்சுமி சரஸ்வதியுடன் விஷ்ணு அலங்கார ஊர்வலம்

எல்லை சாமியாக வன பத்ரகாளியம்மன் காட்சி
லட்சுமி சரஸ்வதியுடன் விஷ்ணு அலங்கார ஊர்வலம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடைபெற்ற பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பல்வேறு கடவுளர் வேடமணிந்து வந்து, தெருகூத்து கலைஞர்கள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். ஊமகவுண்டம்பட்டி பகுதியில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில், கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக  லட்சுமி, சரஸ்வதியுடன் விஷ்ணு, வனப் பத்ரகாளி, ரங்கநாதர், நாரதர் போன்ற வேடங்களில் நாடக கலைஞர்கள் காட்சியளித்தனர். கோயிலை வலம் வந்த அவர்களை கண்டு, பக்தர்கள் பரவசமடைந்தனர். மேளதாளம் முழங்க பக்தர்கள் நடனமாடியும் மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்