ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயணப்படி ஒரு மாதத்திற்கு ரூ.1,500-2000 வரை வழங்க வேண்டும் - உள்துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு

ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு போக்குவரத்திற்கான படியை வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் மனு தாக்கல் செய்தார்.
ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயணப்படி ஒரு மாதத்திற்கு ரூ.1,500-2000 வரை வழங்க வேண்டும் - உள்துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு
x
ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு போக்குவரத்திற்கான படியை வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. கிராமம் மற்றும் நகர்புறங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு செலவாகும் எரிபொருளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயணப்படி நிர்ணயம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு 1500 முதல் 2000 வரை பயணப்படியாக வழங்க வேண்டும் எனவும் இது குறித்து உள்துறை செயலாளர் 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்