இலங்​கையில் 'தினத்தந்தி' - விஜயகாந்த் வாழ்த்து

இலங்கையில் தினத்தந்தி நாளிதழ் பதிப்பை தொடங்கியுள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இலங்​கையில் தினத்தந்தி - விஜயகாந்த் வாழ்த்து
x
இலங்கையில் தினத்தந்தி நாளிதழ்  பதிப்பை தொடங்கியுள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் தினத்தந்தி, துபாயைத் தொடர்ந்து இலங்கையில் புதிய பதிப்பை துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள விஜயகாந்த், தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் தினத்தந்தி பதிப்பை தொடங்கி தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்