"அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க வசதி" - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்கும் வகையில் வசதி ஏற்படுத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க வசதி - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
x
அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க வசதி ஏற்படுத்தக் கோரி முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய அரசுப் பேருந்துகளில் 10 சதவீத்தில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஏறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து அரசு பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்க வசதிகள் செய்ய 2016ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டதோடு இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்