சென்னை : அதிவேகமாக பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் பலி

சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : அதிவேகமாக பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் பலி
x
சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் உதயகுமாரின் மகன் அபிஷேக், தன்னுடன் கேக் கடையில் வேலை பார்க்கும் ஆகாஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில், நேற்று இரவு சேத்துப்பட்டு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் ,மேம்பாலத்தில் இருந்த  இடது புற  மின்கம்பத்தில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஆகாஷ், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். 


Next Story

மேலும் செய்திகள்