வேலூர் : மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்
வேலூர் மாவட்டம் காக்கனாம்பாளையத்தை சேர்ந்த வானரசு, கூடப்பட்டு காலனியை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காக்கனாம்பாளையத்தை சேர்ந்த வானரசு, கூடப்பட்டு காலனியை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள் வானரசுவை பிடித்து ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவருக்கு தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள் பின்னர் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் வானரசுவை ஒப்படைத்துள்ளனர். அவர்மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். வானரசு மது அருந்த சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
Next Story