மனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.
மனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார். காடுவெட்டியில் வசித்து வரும் சின்னதுரை, சுகன்யா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு செல்லாமல் மது அருந்துவதையே வேலையாக செய்து வந்த கணவர் சின்னதுரையை மனைவி சுகன்யா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை, அவரை கத்தியால் 26 இடங்களில் குத்திவிட்டு போலீசாரிடம் சரணடைந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுகன்யா, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்