தறிகெட்டு ஓடி மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த பேருந்து

தறிகெட்டு ஓடி மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த பேருந்து
தறிகெட்டு ஓடி மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த பேருந்து
x
சென்னை தாம்பரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானது. திருவான்மியூரிலிருந்து தாம்பரம் சென்ற அந்த பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெ​ட்டு ஓடி அங்குள்ள மின் கம்பம் மற்றும் கார் மீது மோதி தொடர்ந்து ஓடியது.  ஒரு கட்டத்தில் பேருந்து மின்வாரிய அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்து நின்றது. இந்த விபத்தில், பஸ்சின் அடியில் சிக்கி, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்