சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
x
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 11 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை சென்னையில் இருந்து 13 ஆயிரத்து 871  பேருந்துகள் மூலம் சுமார் 7 லட்சம் பேர், வெளியூர் சென்றுள்ளனர். இதுதவிர, ஆம்னி பேருந்துகள் மூலமும், ரெயில்கள் மூலமும் ஆயிரகக்கணக்கானோர், வெளியூர் சென்று உள்ளனர். வருகிற 18 ம் தேதி பள்ளி - கல்லூரிகள் திறப்பதால், வெளியூர் சென்ற மக்கள், சென்னை திரும்ப துவங்கி விட்டனர். இருந்தபோதிலும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், இன்று முதல் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்