உளுந்தூர்பேட்டை : சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை : சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து
x
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று, உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் வந்த போது, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஓட்டுனர் நாராயணன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே விபத்தில் சிக்கிய பேருந்து, கிரேன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில், போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்