மேகதாது விவகாரத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் : கர்நாடக - தமிழக எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ள நிலையில் கர்நாடக-தமிழக எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேகதாது விவகாரத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் : கர்நாடக - தமிழக எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
* மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து கடந்த 3ஆம் தேதி தமிழக விவசாயிகள் மேகதாது பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

* இந்த நிலையில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் தலையிட எந்த உரிமையும் இல்லை எனக் கூறி கன்னட அமைப்பினர் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர்.

* கர்நாடக தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, தமிழக வாகனங்களை திருப்பி அனுப்புவோம் எனவும் கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தன. 

* இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்திபள்ளியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்