உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கு பெறும் நிறுவனங்களின் பின்னணி குறித்து அரசு ஆராய வேண்டும் - உயர்நீதிமன்றம்
உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, மாநாட்டில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், மோசடி புகாருக்கு ஆளான நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story