உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கு பெறும் நிறுவனங்களின் பின்னணி குறித்து அரசு ஆராய வேண்டும் - உயர்நீதிமன்றம்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கு பெறும் நிறுவனங்களின் பின்னணி குறித்து அரசு ஆராய வேண்டும் - உயர்நீதிமன்றம்
x
உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ​விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, மாநாட்டில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், மோசடி புகாருக்கு ஆளான நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்