விசாரணைக்கு வந்தவரை லத்தியால் தாக்கிய போலீஸ் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரை தாக்குவது போன்று வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணைக்கு வந்தவரை லத்தியால் தாக்கிய போலீஸ் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
x
பள்ளியாடி பகுதியை சேர்ந்த ஜான்லெனின் என்பவருக்கும், அவரது மனைவி பிரபாவிற்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரபா தக்கலை காவல் நிலையத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தார். அப்போது காவல் நிலையத்திற்குள் வந்த இரண்டாம் நிலை காவலர் சேலிஸ் என்பவர், ஜான் லெனினை கம்பால் தாக்கியுள்ளார். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மனைவி பிரபா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுநரான ஜான் லெனினை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்