கோலி குண்டை விழுங்கிய குழந்தை பலி
சென்னை தாம்பரம் அருகே , கோலி குண்டை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே , கோலி குண்டை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்மங்கலம் அஸ்தினாபுரத்தை சேர்ந்த தீனதயாளன், கந்தன்சாவடியில் உள்ள உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவரின் 3 வயது மகன் கனீஷ், கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு கோலி குண்டை எடுத்து விழுங்கி உள்ளான். அது தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சு திணறி மயங்கி கீழே சாய்ந்தான். எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கனீஷ் உயிரிழந்தான்.
Next Story