குடிபோதையில், குழந்தையை தரையில் வீசிய கொடூரம்

முசிறியில், சொத்து தகராறு காரணமாக, தாய் மாமன் ஒருவர், தனது சகோதரியின் குழந்தையை தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில், குழந்தையை தரையில் வீசிய கொடூரம்
x
முசிறியில், சொத்து தகராறு காரணமாக, தாய் மாமன் ஒருவர், தனது சகோதரியின் குழந்தையை தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் சகோதரி சுபாஷினி, முருகையா என்பவரை திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் உள்ள ஆம்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். 
தனது தந்தையை பார்ப்பதற்காக, தனது இரட்டைக் குழந்தைகளுடன் சுபாஷினி ஆம்பூரில் இருந்து முசிறி வந்துள்ளார். அப்போது, அங்கு குடிபோதையில்  இருந்த லோகநாதன், தனக்கு சொத்தை விட்டு கொடுக்கக் கோரி, சகோதரி சுபாஷினியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த லோகநாதன், அருகில் விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினியின் குழந்தையை தூக்கி வேகமாக தரையில் வீசியுள்ளார். படுகாயம் அடைந்த குழந்தைக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த குழந்தை பலனின்றி உயிரிழந்ததால், லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்