ஆசிரியர்கள் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை...

கிருஷ்ணகிரியில் பட்டபகலில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை...
x
கிருஷ்ணகிரியில் பட்டபகலில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் ஆசிரியர்கள் பெருமாளும், அவரது மனைவி கீதாவும் பள்ளி சென்று விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புற கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்ருந்த 25 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருள்கள், ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்