சென்னையில் காலை நேரங்களில் வாட்டும் குளிர்...
பனிபொழிவு காலம் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பொழியும் பனி அதிகாலை நேரங்களில் பனிமூட்டமாக காட்சியளிக்கிறது.
பனிபொழிவு காலம் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பொழியும் பனி அதிகாலை நேரங்களில் பனிமூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் காலை 8 மணி வரை வாகனங்களில் செல்வோரும் நடைபயிற்சி மேற்கொள்வோரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்களில் வருவோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சாலைகளில் செல்கின்றனர். ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறோமோ என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக சென்னை வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story