ராமேஸ்வர உணவகங்கள், கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
ராமேஸ்வரத்தில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள் இதர கடைகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராமேஸ்வரத்தில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள் இதர கடைகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலித்தீன் பைகளுக்கு பதிலாக பேப்பர் கவர்களை உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில் பயன்படுத்துவதை கண்டு பாராட்டினார். பாலிதீன் கவர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை கடைகளில் ஒட்டுமாறும் அறிவுறுத்தினார்.
Next Story