வீடு வாங்கி தர பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் : தீ குளிக்க முயற்சி

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வீடு வாங்கி தர பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் : தீ குளிக்க முயற்சி
x
துரைப்பாக்கத்தை சேர்ந்த குமார் என்பவர் வீடு வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம் தலா 75 ஆயிரம் ரூபாய் வாங்கி, பட்டினம்பாக்கத்தை சேர்ந்த ஆக்னெஸ் மற்றும் குமாரிடம் கொடுத்துள்ளார். வீடு வாங்கி தராமல் இருவரும் ஏமாற்றிய நிலையில், பணத்தை பெற்று தர கோரி பல முறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த குமார், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்த போலீசார், தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்