கிணற்றில் 2 நாட்களாக சிக்கி தவித்த திருடன்...

சென்னை அம்பத்தூரில் போலீசாருக்கு பயந்து தப்பி ஓடியபோது கிணற்றில் விழுந்த திருடன், யாரையும் உதவிக்கு அழைக்க முடியாமல் இரண்டு நாட்களாக உணவின்றி தண்ணீரில் சிக்கி தவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிணற்றில் 2 நாட்களாக சிக்கி தவித்த திருடன்...
x
அம்பத்தூர், இந்தியன் காலனியை சேர்ந்த விஜயகுமார் ஊரில் இல்லாத சமயத்தில், அவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைப்பதை கண்ட அக்கம்பக்கதினர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரை கண்டவுடன் திருடி கொண்டிருந்த மூன்று பேரும் தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், நேற்று அம்பத்தூர் சந்திரசேகரபுரத்தில், கோபால கிருஷ்ண‌னஎன்பவரது வீட்டு கிணற்றில் இருந்து ஜான் ஜெய்சிங் என்பவரை போலீசார் மீட்டுள்ளனர்.  கை கால்களில் எலும்பு முறிவுடன் மீட்கப்பட்ட அவரை சிகிச்சை அளித்து விசாரித்த‌தில், விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிய மூன்று நபர்களில் அவரும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. திருடன் என்பதால், உதவிக்கு அழைக்கவும் முடியாமல் 2 நாட்களாக உணவின்றி  தவித்த‌தாக ஜான் ஜெயசிங் 
போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்