புத்தாண்டு தினத்தில் உயிரியல் பூங்காவில் 21 ஆயிரம் பேர் வருகை...

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு, புத்தாண்டு தினத்தன்று மட்டும், 21 ஆயிரம் பேர் வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தில் உயிரியல் பூங்காவில் 21 ஆயிரம் பேர் வருகை...
x
சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு, புத்தாண்டு தினத்தன்று மட்டும், 21 ஆயிரம் பேர் வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள், விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல், அங்குள்ள சிறுவர் பூங்காவில் ராட்டினம் மற்றும் ஊஞ்சலில் ஆடி மகிழ்ச்சியடைந்தனர். பார்வையாளர்களின் வசதிக்காக பூங்காவில், கூடுதல் பார்க்கிங் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்