புகார்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் - மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குப்தா

கடந்த ஆண்டைப் போல் , இந்தாண்டும் புகார் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குப்தா தெரிவித்துள்ளார்.
புகார்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் - மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குப்தா
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும்  என்றும் , இந்த ஆண்டு  விதிக்கப்பட்ட விதிமுறைகள் 2019 ஆம் ஆண்டிலும் கடைபிடிக்கப்படும் என்றார். எங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், விலங்குகள் நல வாரியத்தின் குழு அங்கு சென்று முழுமையாக கண்காணிக்கும் என்றும் அதற்கு தமிழக அரசு  போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சினிமா  படப்பிடிப்பின் போதும் விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருந்தால் தான் தடையில்லா ன்று வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்