3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி

பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
x
கால்நடை பராமரிப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 2019 ம் ஆண்டு தமிழகத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்