சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் மாதிரி பள்ளி...

சத்தியமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கொமரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில்  இயங்கி வரும் இந்த அரசு மாதிரிப்பள்ளியில்,  5 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், சுற்றுச் சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்த பள்ளி வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுப்பதோடு, பேருந்து, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்