கவுண்டமணி பட பாணியில் பர்தா அணிந்து வந்த இளைஞர்

சத்யராஜ், கவுண்டமணி நடித்த 'ரிக்சா மாமா' என்ற படத்தில், வீட்டு உரிமையாளரை ஏமாற்றி அவரது பெண்ணை காதலிப்பதற்காக, 'பர்தா' அணிந்தபடி கவுண்டமணி நடித்திருப்பார்.
கவுண்டமணி பட பாணியில் பர்தா அணிந்து வந்த இளைஞர்
x
சத்யராஜ், கவுண்டமணி நடித்த 'ரிக்சா மாமா' என்ற படத்தில், வீட்டு உரிமையாளரை ஏமாற்றி அவரது பெண்ணை காதலிப்பதற்காக, 'பர்தா' அணிந்தபடி கவுண்டமணி நடித்திருப்பார்.

கவுண்டமணி காமடி காட்சியை போன்ற சம்பவம், சென்னை வேளச்சேரியில் நடந்துள்ளது. அந்த பகுதியில், பர்தா அணிந்த நபர் ஒருவர், ஆண்களிடம் அருவெறுப்பாக பேசியுள்ளார். ​இதையடுத்து, சந்தேகமடைந்த பொதுமக்கள், அவரது பர்தாவை அகற்றி பார்த்தபோது, ஆண் என தெரிய வந்தது. உடனே, அவருக்கு தர்ம அடி கொடுத்து, பேலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர், சேலத்தைச் சேர்ந்த சங்கர் எனவும் software ஊழியர் எனவும் தெரியவந்தது. இணையதள நிகழ்ச்சிக்காக, பர்தா அணிந்து சென்றதாக அவர் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்