சுகாதார இணை இயக்குனருக்கு எதிராக போராட்டம் : ஒருமையில் பேசுவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

கஜா' புயல் நிவாரண பணிக்காக, நியமிக்கப்பட்ட சுகாதார இணை இயக்குநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
சுகாதார இணை இயக்குனருக்கு எதிராக போராட்டம் : ஒருமையில் பேசுவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு
x
கஜா' புயல் நிவாரண பணிக்காக, நியமிக்கப்பட்ட சுகாதார இணை இயக்குநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிக்காக, கள்ளக்குறிச்சி சுகாதார இணை
இயக்குனர் ஜெமினி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களை ஒருமையிலும் மரியாதை குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெமினி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரப் பணிகள்
துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்