காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் மதுரை வந்தது

காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சரவணன் உடல் அவரது சொந்த ஊரான திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியில் இன்று தகனம் செய்யப்படுகிறது.
காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் மதுரை வந்தது
x
காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சரவணன் உடல் அவரது சொந்த ஊரான திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியில் இன்று தகனம் செய்யப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கார்கில் டிராஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, குளிர் காய கூடாரத்தில் இருந்த சிலிண்டரை சரவணன் பற்ற வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக அது வெடித்ததில்  , சரவணன் உயிரிழந்தார். நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட சரவணன் உடலுக்கு, ஆட்சியர் மற்றும் எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் ஆட்சியர் வழங்கினார். சரவணன் மனைவி படித்துள்ளதால் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்