அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள 27 பொருட்களை பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை பேக்கிங் செய்யும் பணி தீவிரம்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் அட்டைபெட்டியில் வைத்து பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் வழங்கும் இந்த அட்டைபெட்டியில், கைலி, நைட்டி, குடை, தார்ப்பாய் உள்ளிட்ட 27 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இன்னும் ஒரிரு தினங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்