பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி முதியவரின் பெரிய மனது...

பிச்சை எடுத்த தொகையை புயல் நிவாரணத்திற்கு வழங்கிய முதியவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி முதியவரின் பெரிய மனது...
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரங்குகள் அமைத்து நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றனர். நேற்று இரவு அங்கு வந்த, 70 வயதான மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தயங்கியபடி நின்றுள்ளார். அவரிடம் மையத்தில் இருந்தவர்கள் என்ன வேண்டும் என கேட்டதற்கு, தனக்கு உறவுகள் யாரும் இல்லை எனவும், தான் பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்திற்காக வழங்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறிய தன்னார்வலர்கள், அவர் கொடுத்த 12 ரூபாய் பணத்தை நிவாரணத்தொகையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதை நெகிழ வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்