தமிழக - ஆந்திர எல்லையில் 5,000 லி. சாராயம் அழிப்பு : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி
வாணியம்பாடி அருகே மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வாணியம்பாடி அருகே மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு, மர்ம நபர்கள் சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியை சோதனை செய்த போலீசார், சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். தப்பியோடியவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story