ஊருக்குள் நுழைந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு : வனத்துறை செல்லாததால் மக்கள் பீதி
வாணியம்பாடி அருகே ஊருக்குள் வந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வாணியம்பாடி அருகே ஊருக்குள் வந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வாணியம்பாடியை அடுத்த கனவாய்புத்தூர் பகுதியில் சுமார் 13 அடி மலைப்பாம்பு வந்துள்ளது. இதுதொடர்பான தகவலின்பேரில் அங்கு சென்ற இலியாஸ் என்ற பாம்பு பிடிக்கும் தொழிலாளி லாவகமாக பாம்பை பிடித்துள்ளார். இது குறித்து வனத்துறை தகவல் அளித்த போது இரவு முழுவதும் பாம்பை வீட்டில் வைத்திருக்குமாறும், காலை பாம்பை பெற்று வனப்பகுதியாக விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர்.
Next Story