புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி , சுந்தரகோட்டை வல்லூர் ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி , சுந்தரகோட்டை வல்லூர் ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா பகுதி விவசாயிகள் குழந்தைகளை போல தென்னை மரங்களை வளர்த்து வந்ததாகவும், அவை அடியோடு சாய்ந்தது வேதனை அளிப்பதாகவும் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்ட நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டு கொண்டார்.
Next Story