1 மாதமாக காலில் வேலி கம்பி சிக்கிய காட்டெருமை : வனத்துறையினர் 8 மணி நேரம் போராடி சிகிச்சை அளிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம், கிரேக்மோர், அணிமன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
1 மாதமாக காலில் வேலி கம்பி சிக்கிய காட்டெருமை : வனத்துறையினர் 8 மணி நேரம் போராடி சிகிச்சை அளிப்பு
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம், கிரேக்மோர், அணிமன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் கிராம பகுதிகளில் தேயிலை தோட்டம், விளைநிலங்களை ஒட்டி அமைந்துள்ளன. இதில் உணவு, குடிநீரை தேடி கிராமங்களில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற பல்வேறு விலங்குகள் தோட்டத்திற்குள் நுழைந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதில் கடந்த 1 மாதமாக காட்டெருமை ஒன்றின் காலில் கம்பி சிக்கியபடி நொண்டி, நொண்டி கிராம பகுதிக்கு உலா வந்த வண்ணம் இருந்தது. இதை கிராம மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அவர்கள், சுமார் 8 மணி நேர போராடி காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்