ராஜபாளையம் : அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் அவதி
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதியுற்றனர்.
செவிலியர்களும் பணியாளர்களும் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு முன்பதிவு மற்றும் சிகிச்சை அளித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டர் வசதி இல்லாமல் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், அனைத்து வார்டு பகுதிகளிலும் யுபிஎஸ் வசதி உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் உள்ளதாக கூறி அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
Next Story