வைக்கோலை கொண்டு மதகை அடைக்க முயற்சித்த அதிகாரிகள்
வைக்கோலை பயன்படுத்தி அணை மதகு உடைப்பை அடைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 29 அடி உயரம் கொண்ட சாத்தியார் அணை திண்டுக்கல் மற்றும் சிறுமலை பகுதிகளில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தால் 8 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. ஆனால், பழுதடைந்த நிலையில் உள்ள 2 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியது. அணையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் நடராஜன் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் உடனடியாக மதகுகளை அடைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, வைக்கோலை பயன்படுத்தி அணையை அடைக்க பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் நீர் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. அணையிலிருந்து வெளியேறும் நீரை வைகோலை பயன்படுத்தி தடுக்க அதிகாரிகள் எடுத்த இந்த முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story