கஜா புயல் பாதிப்பு எதிரொலி : மின்தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழும் பொதுமக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் மின்விநியோகம் தடைபட்டுள்ளதால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பொதுமக்கள் இரவை கழித்தனர்.
கஜா புயல் பாதிப்பு எதிரொலி : மின்தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழும் பொதுமக்கள்
x
புயல் பாதித்த திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்களும்,  மரங்களும் சாய்ந்து கிடப்பதால் மின்தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி மூலம் அன்றாட பணிகளை மேற்கொண்டனர். 

மீண்டும் மின்சாரம் வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வியாபாரிகளும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வியாபாரத்தை தொடரும் நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்