தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு
x
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு  தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசு அதிகாரிகள், காவல் துறையினர், தன்னார்வலர்கள் இரவு பகலாக பணியாற்றுவதாக கூறியுள்ள பாரதிராஜா, புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம், சாலை மற்றும் குடிநீர் வசதிகளை சரி செய்வதில் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். படகுகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்