வைகை அணையிலிருந்து வினாடிக்கு 4660 கன அடி நீர் வெளியேற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது.
வைகை அணையிலிருந்து வினாடிக்கு 4660 கன அடி நீர் வெளியேற்றம்
x
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின்  நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது. இதனால் வைகை அணையில் இருந்து ஏற்கனவே 1660 கன அடி வீதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக வினாடிக்கு 4660 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் முன்புறம் உள்ள இரண்டு கரைகளை இணைக்கும் பூங்கா பாலம் நீரில் மூழ்கியது.

Next Story

மேலும் செய்திகள்