'கஜா' புயல் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்க கூட்டம்
பாம்பன் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பாம்பன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விசைப்படகுகளை குந்துகால் மற்றும் சின்ன பாலம் பகுதியில் நிறுத்த வசதியாக, பாம்பன் தூக்குப்பாலம் இன்று 12 மணியில் இருந்து இரண்டு மணி வரை திறந்திருக்கும் என மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதுபோல, மீனவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தனுஷ்கோடி, புதுரோடு நடராஜபுரம் சங்குமால் மற்றும் துறைமுக பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
Next Story