"15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்"
'கஜா' புயல் வருகிற 15ம் தேதியன்று கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள 'கஜா' புயல், மெதுவாக நகர்ந்து வருவதாகவும் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வருகிற 15ம் தேதியன்று கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சென்னையில் 14 மற்றும் 15 தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் அவர் கூறினார்.
Next Story