அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு : 2 வாரங்களுக்கு விசாரணை தள்ளிவைப்பு

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் வீரமணிக்கு எதிரான புகார் மீது விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு : 2 வாரங்களுக்கு விசாரணை தள்ளிவைப்பு
x
தமிழக வணிகவரித் துறை அமைச்சர் வீரமணிக்கு எதிரான புகார் மீது விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 6 புள்ளி 90 ஏக்கர் நிலத்தில் இருந்து தங்களை காலி செய்ய சேகர் ரெட்டியுடன் அமைச்சர் மிரட்டல் விடுப்பதாகவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவிற்கு, விளக்கம் அளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, நீதிபதி மகாதேவன், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்