பட்டாசு வெடிக்கக் கூடாது என கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடிகள்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை, பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பட்டாசு வெடிக்கக் கூடாது என கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடிகள்
x
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை, பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பட்டாசு வெடிக்கக் கூடாது என கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவனை மட்டும் மடக்கிப் பிடித்த அப்பகுதி மக்கள், பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ரவுடியின் பெயர் மகேஷ் என தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்